
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தவிக்கும் ஆவடியில் உள்ள வடமாநில மாநிலத்தை 25 குடும்பங்களுக்குஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக 15 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இத்துடன் அவர்களுக்கு முககவசமும் 1 Bed-டும் வழங்கப்பட்டது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக கோவிலம்பாக்கம் ஏரி கரை பகுதியில் வசிக்கும் 40 திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருநங்கைகள் அனைவருக்கும் முககவசம் கொடுத்து, தனி நபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
நேற்று (16.04.2020)ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் வீராபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார்.
இந்த நிகழ்வின்போது இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் செயல் திட்ட மேலாளர் திரு.ஹரிஷ்குமார், ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில் தன்னார்வலர்கள் மகாலட்சுமி,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்னும் நிறைய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் மக்களின் பசியை போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.
விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு!!!
வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?
இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.
எண்ணெய்
144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..
Recent Comments