•  |  :
image-title
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 22.10.2022 அன்று மாலை 5 முதல் இரவு 7 வரை ஆவடி புதுநகர் மற்றும் புதிய கண்ணியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் திரு.பிரசன்னா திருமதி. சவிதா மற்றும் ஜெகத் ஆகியோர் உணவு வழங்கி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து,  திரு நரேஷ் பிரபு அவர்கள் புத்தாடை கொடுத்து குழந்தைகளை மகிழ செய்தார். பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் திரு சஞ்சீவி அறவப்பள்ளி மற்றும் திருமதி. ஷீலா சஞ்சீவி அவர்கள் பாரம்பரிய இனிப்பு மிகுந்த லட்டை கொடுத்து இன்பமான தீபாவளியை கொண்டாடச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐகிவர் நிறுவனம் சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குலோப் ஜாமுன் மற்றும் சீடைகள் அடங்கிய பேக்குகளை கொடுத்து மகிழ்ந்தனர். மொத்தத்தில் 
இந்த தீபாவளி குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது
குழந்தைகள் அனைவரும் இனிப்புகளையும் புத்தாடைகளையும் லட்டுகளையும் வாங்கிக்கொண்டு உணவையும் ருசித்து உண்டு மகிழ்ந்தனர்.
 
இந்த நிகழ்வில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமளா சிவகுமார் அவர்களும் பவித்த ரஞ்சனி மற்றும் ஜெய் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலை நேர மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் ஜீவிதா கீர்த்தனா சக்தி மதுமிதா மற்றும் கார்த்திகா அனைவரும்அருமையாகஇந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த அருமையா தீபாவளி திருநாளில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகளுக்கு அனைத்தையும் வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும் இனிய உதயம் துண்டு நிறுவனத்தின் சார்பாகவும் குழந்தைகள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
Read More
image-title

அன்புள்ளம் கொண்டோரே….

மகிழ்வித்து மகிழ் (Joy of giving) மாதத்தில் குழந்தைகளின் நலனை வலுபடுத்த பள்ளி திறக்கப்பட்டதால் ஏழை  மாணவ மாணவிகளுக்கு மாஸ்க், சானிடைசர்  மற்றும் ஊட்டசத்து  பொருட்கள் கொடுக்க நிதி திரட்டி வருகிறோம். உங்களின் கருணை மிகுந்த பங்களிப்பை  கீழே உள்ள லிங்கை (Link) கிளிக் செய்து நிதி அளித்து உதவுமாறு  அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம். வருங்கால சந்ததியரை நலமோடு காப்பது நமது கடமையாகும்.

IUCT have been raising funds to provide masks, sanitizers and nutritional products to poor students as the school reopens to strengthen the welfare of children during the month of Joy of giving.

We kindly ask you to donate your kind contribution by clicking the link below. It is our duty to safeguard future generations.

 

https://bob2021.giveindia.org/projects/healthy-children-wealthy-citizen-protect-children-from-corona-virus/,

Read More
image-title

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 29.08.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி  பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சிக்கு

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவ

னத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துத

ல்) சட்டம் போன்றவற்றின் மீது பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எப்படி சரிசெய்வது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதன்பின் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு பங்கேற்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான செயல்திட்டம் குறித்து திட்ட வரைவுரை செய்தனர்

இறுதியாக குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திரு எஸ்.பி. ராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

நேற்று (23.06.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் 20க்கு மேற்பட்ட மக்களுக்கு(விதவைகள்பெண்கள்) புடைவையும் உணவும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கமும் உட்சாகமும் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு வழங்கினார் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள்…

Read More
image-title

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..

 

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

வீட்டில் இருப்போம் !          கொரோனாவை விரட்டுவோம்.!!

இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம்.

முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness

அதனை தொடர்ந்து நேற்று 24.03.2020 இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் (IUCT) நிறுவனர் திருமதி.கோமளா அவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்ளவது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விரங்களை சொல்லி அவர்களுக்கு HAND WASH, FACE MASK and FACIAL TISSUSE PAPERS ஆகிய பொருட்கள் வழங்கினார்.
அனைவரும் வீட்டில் இருப்போம் !
கொரோனாவை விரட்டுவோம்.!!
தனித்திருப்போம்! கொரோனாவை தடுத்து நிறுத்துவோம்!!

 

Read More
image-title

        உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மகளிர் மகளிர் தின சிறப்புகள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்குநல்ல அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலையில் 10.30 மணி முதல் 1.00

மணி வரையிலும் மதியம் 2 .10 மணி முதல் 4 .20 வரை வீராபுரம் பள்ளியிலும் இந்த

வகுப்புகள் கொடுக்கப்பட்டதுஇந்த பயிற்சியில் 110க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இந்த பெயர்ச்சியில் பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த 110 குழந்தைகளில் 40க்கும்                                               மேற்பட்ட குழந்தைகள் எங்களுக்கு இந்த தற்காப்பு     கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த தற்காப்பு கலையான சிலம்ப

பயிற்சி ஆசிரியர் ராமையா மற்றும் சியான் ராஜ் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்தன

ர்.

Read More
image-title

                                                                 
                                                                         உலகை அச்சுறுத்தும் கொரோனா

இனியஉதயம் தொண்டு நிறுவத்தின் சார்பாக நேற்று (13.03.2020) கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதுநகரில் உள்ள இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தில் மாலை 6.00மணி முதல் 7.00 வரை மிகக் சிறப்பாக நடைப்பெற்றது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதை எவ்வாறு தடுப்பது (எதிர்கொள்வது) என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது, கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். கண்,மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் “வைட்டமின் C” நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

இரும்பும்போதும் தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும் மேலும் முக கவசமும் (FACE MASK)அணிவது சிறந்ததாகும் என்றும் சுடுநீரில் எலிமிச்சம்பழ சாறு கலந்து குடிக்கவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்டது.                                                                                           

இந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 60க்கு மேற்ப்பட்ட                     குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு                                              தெரிந்துக்கொண்டனர்கள்.கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்                            அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சி பழங்கள் கொடுக்கப்பட்டது.

இந்த கொரோன                       வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுநகர் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் செல்வி.மேகலா மற்றும் செல்வி.நிவேதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். உடன் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு.ஹரிஷ்குமார்

 

 

Read More
image-title

ஆவடி,-ஜன18. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ் குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் நிவேதா முன்னிலையில் மேகலா வரவேற்புரையை வழங்கினார்.

இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள், முன்னால் வார்டு உறுப்பினர் திரு.M.குமார், காமாட்சி குமார் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

   

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் 30 க்கு மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். குழந்தைகளுக்கு இசை நாற்காலி, நாடகம், நடனம், பாட்டலில் தண்ணீர் நிரப்புதல்,ஓட்டபந்தயம், கோலப்போட்டி, பலுன் உடைத்தல்,பிஸ்கட் சாப்பிடுதல், மற்றும் லெமன் ஸ்பூன் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பெற்றோர்களும் ஆர்வமாக கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றனர்.

   

மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர் புஷ்பா, மற்றும் லயோலா கல்லூரி மாணவர் தாமஸ், சகோதரர் சுஜித், தன்னார்வலர்கள் நவீன், திவ்யா ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

 

Avadi, january 18. The Pongal ceremony was held on 10.01.2010 at the SS Mallavi Talent Center in Pudunagar, Thiruvallur District.

The Pongal ceremony, chaired by S. Harish Kumar, was presented by Meghala in the presence of Nivetha.

The special invitees at the Pongal ceremony were Mrs. Komala, Founder of the Iniya Uthayam NGO, Mr. M. Kumar, Kamakshi Kumar and Williams, Ward members.

More than 75 children and over 30 parents participated in the event. A variety of sports competitions were held for children, including music, play, dancing, bottled water, racing, scoring, ballooning, biscuit eating, and lemon spoon. Parents also took part in these competitions and won prizes.

Pushpa, the editor of  Heart charity, and Thomas, Brother Sujith, Loyola College student, volunteers Naveen and Divya attended the function.

Read More
image-title

மோரை-ஜன14. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மோரை பஞ்சாயத்தில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் சாமுண்டீஸ்வரி மற்றும் லைலா முன்னிலையில் மாணவி பிரியதர்ஷினி வரவேற்புரையை வழங்கினார்.

The Pongal ceremony was held at 10.30 am today (14.01.2020) in New Kanniyamman Nagar, Morai Panchayat, Mooriya Panchayat. The Pongal ceremony was presided over by Mrs. Komla, Founder of ‘Happy Udayam’ charity, Pramodarshini, a student, presenting a welcome address in the presence of Chamundeswari and Laila.


இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதிய கன்னியம்மன் நகர் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகளான திரு.வெங்கடேசன்,திரு,பாலகுமார்,திரு.இளமாறன்,கண்ணன் மற்றும் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The event was attended by Mr. Venkatesan, Mr., Balakumar, Mr. Ilamaran, Mr. Kannan and Mr.Silambarasan.

 

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.குழந்தைகளுக்கு கோலப்போட்டி,பலூன்கள் உடைத்தல்,கண்ணை கட்டி பொட்டு வைத்தல்,நடனம் மற்றும் சிலம்பாட்டம் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

More than 75 children and parents participated in the Pongal Festival. A variety of sports competitions were held for the children such as rookies, balloons, eyelashes, dancing and chilampattam.


மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மேரி, காயத்ரி, நிவேதா, மேகலா, மகேந்திரவர்மன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மெல்வின் மற்றும் தாமஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

Read More