•  |  :
image-title
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 22.10.2022 அன்று மாலை 5 முதல் இரவு 7 வரை ஆவடி புதுநகர் மற்றும் புதிய கண்ணியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் திரு.பிரசன்னா திருமதி. சவிதா மற்றும் ஜெகத் ஆகியோர் உணவு வழங்கி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து,  திரு நரேஷ் பிரபு அவர்கள் புத்தாடை கொடுத்து குழந்தைகளை மகிழ செய்தார். பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் திரு சஞ்சீவி அறவப்பள்ளி மற்றும் திருமதி. ஷீலா சஞ்சீவி அவர்கள் பாரம்பரிய இனிப்பு மிகுந்த லட்டை கொடுத்து இன்பமான தீபாவளியை கொண்டாடச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐகிவர் நிறுவனம் சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குலோப் ஜாமுன் மற்றும் சீடைகள் அடங்கிய பேக்குகளை கொடுத்து மகிழ்ந்தனர். மொத்தத்தில் 
இந்த தீபாவளி குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது
குழந்தைகள் அனைவரும் இனிப்புகளையும் புத்தாடைகளையும் லட்டுகளையும் வாங்கிக்கொண்டு உணவையும் ருசித்து உண்டு மகிழ்ந்தனர்.
 
இந்த நிகழ்வில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமளா சிவகுமார் அவர்களும் பவித்த ரஞ்சனி மற்றும் ஜெய் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலை நேர மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் ஜீவிதா கீர்த்தனா சக்தி மதுமிதா மற்றும் கார்த்திகா அனைவரும்அருமையாகஇந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த அருமையா தீபாவளி திருநாளில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகளுக்கு அனைத்தையும் வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும் இனிய உதயம் துண்டு நிறுவனத்தின் சார்பாகவும் குழந்தைகள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
Read More
image-title

நேற்று (11.11.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பகுதி, மடிப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர்  மற்றும் மீனம்பாக்கம் NGO காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கு  மேற்பட்ட மக்ககளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் தன்னார்வலர்கள் S.P. ராஜ், பிலிப்ஸ் மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் சேவைப்புரிந்தனர்.

 

Read More
image-title

அன்புள்ளம் கொண்டோரே….

மகிழ்வித்து மகிழ் (Joy of giving) மாதத்தில் குழந்தைகளின் நலனை வலுபடுத்த பள்ளி திறக்கப்பட்டதால் ஏழை  மாணவ மாணவிகளுக்கு மாஸ்க், சானிடைசர்  மற்றும் ஊட்டசத்து  பொருட்கள் கொடுக்க நிதி திரட்டி வருகிறோம். உங்களின் கருணை மிகுந்த பங்களிப்பை  கீழே உள்ள லிங்கை (Link) கிளிக் செய்து நிதி அளித்து உதவுமாறு  அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம். வருங்கால சந்ததியரை நலமோடு காப்பது நமது கடமையாகும்.

IUCT have been raising funds to provide masks, sanitizers and nutritional products to poor students as the school reopens to strengthen the welfare of children during the month of Joy of giving.

We kindly ask you to donate your kind contribution by clicking the link below. It is our duty to safeguard future generations.

 

https://bob2021.giveindia.org/projects/healthy-children-wealthy-citizen-protect-children-from-corona-virus/,

Read More
image-title

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 29.08.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி  பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சிக்கு

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவ

னத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துத

ல்) சட்டம் போன்றவற்றின் மீது பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எப்படி சரிசெய்வது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதன்பின் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு பங்கேற்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான செயல்திட்டம் குறித்து திட்ட வரைவுரை செய்தனர்

இறுதியாக குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திரு எஸ்.பி. ராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

நேற்று (23.06.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் 20க்கு மேற்பட்ட மக்களுக்கு(விதவைகள்பெண்கள்) புடைவையும் உணவும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கமும் உட்சாகமும் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு வழங்கினார் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள்…

Read More
image-title

Dear Friends and Well-Wishers,

Iniyaudaiyam charitable trust is working for children,Youth and women for their education,Health and livelihood development programs from 2004.

Thanks to  your congrats, wishes, and Encouraging  Our iniyaudaiyam activities. You aware about ” Food for Elder citizen” . During this covid

Public curfew period, serving MealsRegularly to the elder citizens at Avadi and Surrounding areas.  We are expecting Financial

Or material support from your side to serve More needy people.

Per food Rs.25 only,

Those who are willing  to support  “Food for elder citizen “

 Contact  9444423600

Bank detail    

Name of the Account    :M/S. INIYAUDAIYAM CHARITABLE TRUST

A/C No                           : 488337711

Name of the Bank       : INDIAN BANK

Branch                          : AVADI

IFSC Code                    : IDIB000A79

 Or For Google pay -7092955566

“ஏழையின் சிரிப்பிலே  இறைவனை காணலாம்“

 

 

Read More
image-title

கொரோனாவின் கோரபிடியில் தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த இரண்டு வார ஊரடங்கில் 11.05.2021 முதல் தினமும் 120 முதியோர்களுக்கு மதிய உணவு முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் அதிக அளவில் உணவு தேவைப்படுவதால் உங்களின் உதவிகள் தேவைப்படுகிறது.

தொடர்புக்கு: 9444423600 / 7904195163

 

 

Read More
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் தரமான காட்டன் துணிகளலான முககவசம் (Face Mask) பல வண்ணங்களில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்..

Face Mask, a quality cotton fabric, is available in a variety of colours at low prices at INIYAUDAIYAM CHARITABLE TRUST.

Read More